×

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மாயம்: கண்காணாத தேசம் செல்வதாக ஆடியோ வெளியீடு

புழல்: புழல், தேவநேயப்பாவணர் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (39). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கோமதி என்ற பியூலா (33). இவர்களுக்கு ஜெனிபர் (14), எஸ்தர் (12) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோமதி தனது மகள்களுடன் புழல் சிவராஜ் மெயின் தெருவில் வசிக்கும் தனது தந்தை காளிராஜ் (55) மற்றும் தாய் சுந்தரி (50) ஆகியோரிடம் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோமதி தனது கணவர் லாரன்ஸ்சுக்கு செல்போன் மூலம் ஒரு ஆடியோ தகவலை அனுப்பி உள்ளார்.

அதில், ‘‘நாங்கள் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி உள்ளோம். இதனால் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு தொல்லை தருகின்றனர். எனவே நாங்கள் கண்ணுக்கு தெரியாத தேசத்துக்கு, சென்று விடுகிறோம். எங்களை தேட வேண்டாம்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, லாரன்ஸ் தனது மாமனார் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட 5 பேரும் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து லாரன்ஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...