×

கன்டெய்னர் லாரியில் சிக்கி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

காசிமேடு: புது வண்ணாரப் பேட்டையில்  கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் உடல் நசுங்கி பலியானார்.
 திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜாவீத் (30). சாப்ட்வேர் இன்ஜினியர். நேற்று மாலை ஜாவீத், வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் அருகே சென்று கொண்டிருந்தார். முன்னால், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு, மதுரவாயல் நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது, நிலைதடுமாறி அவர், லாரியின் பக்கவாட்டில் விழுந்தார்.

இ்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர், சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சக்கரத்தில் சிக்கிய உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைபார்த்த, டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார்.  பொதுமக்கள், அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து, காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ராஜபாளையத்தை சேர்ந்த இதயராஜா என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000...