×

ஓட்டலில் தகராறு திமுக எம்எல்ஏ மகனை கைது செய்ய போலீஸ் தீவிரம்

ஆலந்தூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ மகனை தகராறு காரணமாக போலீசார் கைது செய்ய தேடிவருகின்றனர். திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த கே.பி.பி.சாமி உள்ளார். இவரது மகன் பரத் பிரபாகரன். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் கிண்டியில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த  ஒரு போலீஸ் உயரதிகாரி மகனுக்கும்,  எம்எல்ஏவின் மகனுக்கும் இடையே  திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த தகவலறிந்த வந்து கிண்டி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரி மகனுடன் வந்த கார்த்திக் சுரேஷ் கிண்டி போலீசில் எம்எல்ஏ மகன் பரத் பிரபாகரன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பரத் பிரபாகரன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில், பரத்பிரபாகரனை பிடிக்க திருவொற்றியூரில் உள்ள அவரது வீட்டுக்கு கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் மற்றும் போலீசார்  நேற்று சென்றனர். அப்போது, அவர் அங்கு இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள எம்எல்ஏ மகன் உட்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டலில் தகராறு திமுக எம்எல்ஏ மகனை கைது செய்ய போலீஸ் தீவிரம்

ஆலந்தூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ மகனை தகராறு காரணமாக போலீசார் கைது செய்ய தேடிவருகின்றனர். திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த கே.பி.பி.சாமி உள்ளார். இவரது மகன் பரத் பிரபாகரன். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் கிண்டியில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த  ஒரு போலீஸ் உயரதிகாரி மகனுக்கும்,  எம்எல்ஏவின் மகனுக்கும் இடையே  திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த தகவலறிந்த வந்து கிண்டி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரி மகனுடன் வந்த கார்த்திக் சுரேஷ் கிண்டி போலீசில் எம்எல்ஏ மகன் பரத் பிரபாகரன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பரத் பிரபாகரன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில், பரத்பிரபாகரனை பிடிக்க திருவொற்றியூரில் உள்ள அவரது வீட்டுக்கு கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் மற்றும் போலீசார்  நேற்று சென்றனர். அப்போது, அவர் அங்கு இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள எம்எல்ஏ மகன் உட்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...