×

பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி

மும்பை: ஐபிஎல் டி-20 தொடரில் குவாலிபயர் 1 போட்டியில்  ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 43 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 140 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

ஐதராபாத் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சென்னை அணி தடுமாறியது. டூ பிளெஸ்ஸிஸ் விடா முயற்சியால் சென்னை அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 19.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா, கவுல், ரஷீத் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை அணியில் அதிகபட்சமாக பிளெஸ்ஸிஸ் 67 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ளன.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று காலை பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு