×

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய மகள்

புனே: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குல்காவில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தீவிரவாதிகளுடனான சண்டையின் போது இரு குண்டுகள் துளைத்து ராணுவ வீரர் தீபக் நெய்வால் என்பவர் காயமடைந்தார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு குடும்பத்தினரும், ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்திய நிலையில் ராணுவ வீரரின் 8 வயது மகள் கண்ணீருடன் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு...