×

நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

கேரளா: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேகே சைலஜா கூறியுள்ளார். நிபா வைரஸ் தாக்குதல் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா டீச்சர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். தற்போது வரை 18 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. சோதனை நடத்தியதில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர் என்றும், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நிபா வைரஸ் தாக்கம் குறித்த தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் சைலஜா கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் சமத்துவமின்மை உச்சம் தொட்டது!!