×

மதிமுக-நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் விவகாரம்: சீமான் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி மதிமுக-நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 19ம் தேதி, திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர்.

திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 6 பேரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், மதிமுகவை சேர்ந்த வெல்லமண்டி சோமு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி...