×

மயிலாடுதுறை அருகே தொடரும் மணல் கடத்தல் : பொதுமக்கள் போராட்டம்

நாகை : மயிலாடுதுறை அருகே தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ சகோதரரின் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றில் புதிதாக தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜின் சகோததரர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பொக்கலைன் இயந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் கொள்ளை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் உறுதியளித்தை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறைபிடித்த பொக்கலைன் இயந்திரம், லாரிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...