×

பழுது சரிசெய்யப்பட்டு வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் என 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதே போல இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரண்டாவது நிலையில் உள்ள ஒன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அனல் மின் நிலைய ஊழியர்கள் முயற்சியால் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் மின் தட்டுபாடு பற்றாக்குறை நீங்கும் என மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...