சென்னை: சென்னை அருகேயுள்ள கானத்தூரில் ஹெட்போன் அணிந்தவாறு தூங்கிய பாத்திமா என்ற பெண்மணி நினைவு திரும்பாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டு கேட்டவாறு தூங்கிய அவர், சுயநினைவு இழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் கணவர் அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்காமல் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அவரின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பாத்திமாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பாத்திமாவின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் இருந்ததால் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.