×

உடல் நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டிடிவி.தினகரன் மீண்டும் தாக்கு

கும்பகோணம்:உடல் நலம் குன்றியதால் திவாகரன் உளறிவருகிறார்’ என்று டிடிவி.தினகரன் கூறி உள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:மாநில அரசு நலனுக்காகதான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மாநில அரசின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் இணக்கமாக இருந்து வருகின்றனர். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை.

அப்படி இருக்கையில் அவர்களால் எப்படி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என்று திவாகரன் கூறியுள்ளார். திவாகரனுக்கு 2002ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. இதனால் உடல்நலம் குன்றி உளறி கொண்டு இருக்கிறார். அவருக்கு எங்கள் மீது பாசம் இல்லாவிட்டாலும், உறவினர் என்ற முறையில் அவர் மீது நாங்கள் பாசம் வைத்துள்ளோம். அதனால் அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. இவ்வாறு தினகரன் கூறினார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...