×

குரங்கணி தீ விபத்து வழக்கில் கிளப் உரிமையாளர் போடி கோர்ட்டில் சரண்

போடி: குரங்கணி தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலியானது தொடர்பாக சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான் கெய்ட், போடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.  இதையடுத்து சென்னை டிரக்கிங் கிளப் நிறுவன உரிமையாளர் பீட்டர் வான் கெய்ட் மீது குரங்கணி போலீசார், வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை  கிளையில் பீட்டர் வான் கெய்ட் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு, விசாரணை முடியும்வரை இந்தியாவை விட்டு எந்த வெளிநாட்டுக்கும் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், குரங்கணி தீவிபத்து வழக்கு தொடர்பாக  பீட்டர் வான் கெய்ட், போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அப்போது நீதிபதி மாணிக்கவாசகம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

Tags :
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்