×

காவிரி மேலாண்மை அமைக்க கோரி விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி: வேதாரண்யத்திலிருந்து தொடக்கம்

வேதாரண்யம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியுள்ளது. வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து நீதி கேட்டு 2,500 கி.மீ வரை 5 நாட்கள் மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். வேதாரண்யத்தில் தொடங்கிய இந்த பேரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் வழியாக இன்று ஸ்ரீரங்கம் சென்றடைகிறது. தொடர்ந்து குளித்தலை, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, மயிலாடுதுறை வழியாக செல்லும் பேரணி 5வது நாளில் திருவாரூரில் நிறைவு பெறவுள்ளது.

Tags :
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...