×

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை...ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி

ஜோத்பூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மேலும் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆசாராம் பாபு உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆசாரம் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று நீதிபதி மதுசூதனன் சர்மா தீர்ப்பு வாசித்தார். இந்நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபு தண்டனை வழங்கியதையடுத்து 3 மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு. 75 வயதான இவர் மீது, 2013-ம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் சாமியார் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர். மேலும், குஜராத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இருபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு, அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஜோத்பூரில் நடந்து வரும் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டணை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சாமியார் ஆஸ்ராம் பாபுவுக்கு ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெருமளவு ஆதரவாளர்கள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...