×

பாலியல் வன்கொடுமை வழக்கு : சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி...ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜோத்பூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசாராம் பாபு உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாரம் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று நீதிபதி மதுசூதனன் சர்மா தீர்ப்பு வாசித்தார். தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜோத்பூர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ஆசிரம நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து  அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதையடுத்து 3 மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு. 75 வயதான இவர் மீது, 2013-ம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் சாமியார் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர். மேலும், குஜராத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இருபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு, அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஜோத்பூரில் நடந்து வரும் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ராம் பாபுவுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சாமியார் ஆஸ்ராம் பாபுவுக்கு ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெருமளவு ஆதரவவாளர்கள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள்...