×

நாட்டிற்கே முன்மாதிரி கிராமம் : விழுப்புரம் அருகே பல ஆண்டுகளாக புகை பிடிக்க தடை செய்யப்பட்டு இயற்கையில் வாழும் மக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏழுசெம்பொன்  கிராமத்தில் பல ஆண்டுகளாக புகை பிடிக்க தடை செய்யப்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த அந்த கிராமத்தில் எவரும் புகை புடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டுபாடு அந்த கிராமத்தில் உள்ளதாகவும் நாட்டிற்கே முன்மாதிரி கிராமமாக உள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் போன்றவை விற்கப்படுவதில்லை. மேலும் வெளியூரிலிருந்து அந்த கிராமத்தில் வருவார்கள் யாராவது புகை பிடித்தல் அதன் தீமையை எடுத்து கூறி அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் முயற்சியை மேற்கொள்வதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். அந்த கிராமத்தில் வாழ்வதை பெருமையாக கிராம மக்கள் கருதுகின்றனர்

Tags :
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...