×

மாயனூரில் பரபரப்பு: மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஆனால் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எங்களுக்கும் அனுமதி தர வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளிப்பது தொடர்பாக திங்கட்கிழமை (நேற்று) முடிவு எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆத்திரமடைந்தனர். இன்று காலை 20க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளினர். பின்னர் அந்த மாட்டு வண்டிகளை மாயனூர் கதவணை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டனர். மாட்டு வண்டிகள் சாலையில் நின்றதால், ஆற்றில் இருந்து மணல் எடுத்து வரும் லாரிகள், வெளியில் வர முடியவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags :
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை