×

ஈரோட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் 1 மணி நேரம் புறக்கணிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை 1 மணி நேரம் புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. திண்டல் தனியார் பள்ளி வளாகத்தில் கூடிய ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியை 1 மணி நேரம் புறக்கணித்துள்ளனர்.  

10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில் 61 கல்வி மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் 1 மணி நேரம் பணியை புறக்கணித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 27ம் தேதி முதல் முழுமையாக விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...