தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பேரணி நடத்தினர். தமிழகத்தில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை சிவகங்கை பூங்கா, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்றனர்.
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் டெல்டா மாவட்டப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர். மத்திய அரசு காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.