×

சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் குடித்துவிட்டு கும்மாளம் வேலூர் கோட்டையை திறந்தவெளி பாராக மாற்றிய மாணவிகள்: வாட்ஸ்அப்பில் வைரலானதால் பரபரப்பு

வேலூர்: டாஸ்மாக் சரக்கு பாட்டிலை கையில் ஏந்தி, வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தனர்.வாட்ஸ் அப் வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டைவெளி பூங்கா அகழியை ஒட்டி அமைந்துள்ள கோட்டை மதில் மீது 3 பெண்கள் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக நடனமாடுகின்றனர். அவர்களில் ஜீன்ஸ் பேன்ட்டும், வெள்ளை கலர் டி சர்ட்டும் அணிந்த ஒரு பெண்ணின் கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர் ஓவென சத்தமிட்டு பீர் பாட்டில் மூடியை தனது பற்களால் கடித்து திறந்து பீரை குடிக்கிறார்.

2 மடக்கு பீரை குடிக்கும் அந்த பெண் செல்போனில் படம் எடுக்கும் தனது சக தோழியை பார்த்து, ‘எதுக்குடி வீடியோ எடுக்குற?’ என்று கேட்கிறார். அதற்கு படம் எடுக்கும் அந்த மாணவி, ‘சும்மாதான் எடுக்கிறேன்’ என்கிறார். அதற்கு அடியே, ‘அதை யாருக்காவது அனுப்பிட போற ஜாக்கிரதை’ என்று கூறுகிறார்.‘யாருக்கும் அனுப்ப மாட்டேன்’ என்று கூறும் அவர், தொடர்ந்து படம் எடுப்பதில் முனைப்பு காட்டுகிறார். அவருக்கு மற்ற 3 மாணவிகளும் பாட்டிலை ஒருசேர பிடித்தும், பாட்டிலை மாறி, மாறி வாங்கி குடித்தும் வீடியோ எடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். ஒருவழியாக பீர் பாட்டிலை காலி செய்யும் அவர்கள் போதையில் தள்ளாடி நடனமாடுகின்றனர்.

அப்போது கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், இவர்களை பார்த்து முகம்சுழித்தபடி சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் தைரியமாக செல்போன் மூலம் பதிவு செய்வதுதான் வேடிக்கை. இந்த வீடியோ தான் இப்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags :
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...