சென்னை: பாஜவும், அதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி இல்லை என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாஜ கூட்டணியில் அதிமுக இடம் பெற வேண்டும் என்று கூறியிருப்பதற்கு, தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் நான் கூற முடியாது. தேர்தல் ேநரத்தில் கூட்டணி பற்றி, கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை, நாடாளுமன்றத்தில் தனித்துதான் செயல்பட்டு வருகிறோம்.
அதிமுக ஆதரவு பத்திரிகையில், ‘பாஜவும், அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்’ என்று செய்தி வெளியிட்டிருப்பது தவறானது. தற்போது, இரட்டை குழல் துப்பாக்கி எங்குமே கிடையாது. அன்னப்பறவை, இரட்டை குழல் துப்பாக்கி என்று பேச்சுக்குத்தான் கூறுவார்கள். தற்போது அன்னப்பறவையும் இல்லை, இரட்டை குழல் துப்பாக்கியும் இல்லை. ஒரு குழல் துப்பாக்கிதான் உள்ளது. ஒரு குண்டுதான் போட்டு சுட முடியும். ஒரே நேரத்தில் இரண்டு குண்டுகள் போட்டு சுட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.