×

சசிகலாபுஷ்பா 2வது கணவர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: அதிமுக எம்பி சசிகலா புஷ்பா (41), டெல்லியில் வசிக்கும் வக்கீல் ராமசாமியை (47) கடந்த மார்ச் 26ம் தேதி மறுமணம் செய்தார். இந்நிலையில் மதுரை, வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சத்யபிரியா, ராமசாமி தனது கணவர் என்றும், சசிகலா புஷ்பாவை மறுமணம் செய்ய முயற்சிப்பதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து போலீசார், ராமசாமி, இவரது சகோதரிகள் செல்வி மற்றும் பாரதி மீது நம்பிக்கை மோசடி, மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராமசாமி உள்ளிட்ட 3 பேரும் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சக்திக்குமார், ராமசாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், மற்ற இருவருக்கு முன்ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...