சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில் போராடிய இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் கட்சி ஒருங்கிணைபாளர் சீமான் ஆகியோரை பார்க்க சென்றபோது நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் வைத்துள்ளனர்.
அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக மாநிலத்தில், பாஜக வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர் வரும் என்று தமிழிசை கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள், அந்த கருத்தினை கர்நாடக மாநில பாஜ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் தெரிவிக்கட்டும் அல்லது பிரதமர் மோடி கூறட்டும் அப்போது பார்ப்போம். மற்றவர்கள் யாருக்கும் இந்த கருத்தை கூறுவதற்கு அருகதையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.