வாடகை வீட்டில் வசிக்கும் பேரனுக்கு கவலை; அன்பு பெரியதா? பணம் பெரியதா?.. வைரலாகும் பாட்டியின் பதில்

மும்பை: வாடகை வீட்டில் வசிக்கும் பேரனிடம், பாட்டி கூறும் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும், அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள், கணவன் – மனைவி முதல் அனைத்து வகை காமெடி வீடியோக்களையும் மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வகையில், பாட்டியும் பேரனும் உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேரன் ஒருவர் தனது பாட்டியுடன் பேசுவதை, தனது வீடியோ கேமராவை ஆன் செய்து பதிவு செய்துள்ளார். பேரன் தனது பாட்டியிடம், ‘என் நண்பன் தனது வீட்டிற்கு தனது பாட்டியின் பெயரை வைத்துள்ளான். ஆனால், நான் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்’ என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த அந்த பாட்டி, ‘உன்னுடைய பாட்டி உன்னுடன் வாழ்கிறார். அன்பு பெரியதா? பணம் பெரியதா?’ என்று பொறுமையுடன் கேட்கிறார். பேரன் அதற்கு பதிலளிக்க முடியாமல் சிரிக்கிறான். இத்துடன் இந்த வீடியோ முடிகிறது. பாட்டி – பேரனின் இந்த அன்பான சண்டையை சமூக ஊடங்களில் ரசித்து கேட்கின்றனர். இந்த வேடிக்கையான வீடியோவை பலரும்  ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், பல்வேறு கருத்துகளையும் எதிர்வினைகளையும் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், ‘இந்த பாட்டி மிகவும் அழகாக இருக்கிறார்’ என்றும், ‘அன்பு என்றும் நிரந்தரமானது; அதனை இழந்துவிடாதீர்கள்’ என்றும், ‘குடும்பத்தில் அன்பானவர்கள் கிடைப்பது அரிது’ என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். …

The post வாடகை வீட்டில் வசிக்கும் பேரனுக்கு கவலை; அன்பு பெரியதா? பணம் பெரியதா?.. வைரலாகும் பாட்டியின் பதில் appeared first on Dinakaran.

Related Stories: