சென்னை: பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’. இப்படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ரேஷ்மி மேனனும், ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி உள்ளார். கஷ்மீரா பர்தேசி ஹீரோயின். தமிழில் கவுரவ வேடத்தில் ஆர்யா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாபி சிம்ஹா கூறியதாவது: வசந்த முல்லை படத்தை எனது மனைவியும் நண்பரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.