சென்னையில் நடந்த உழவன் அறக்கட்டளை விழாவில் பேசிய கார்த்தி, விவசாயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உழவன் அறக்கட்டளையைத் தொடங்கினேன். சமுதாயத்தில் விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியம். அதற்காகத்தான் உழவர் விருதுகள் வழங்கும் பணியைத் தொடங்கினோம். சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயமாக இருக்கும் என்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறோம்.