கடந்த 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்த ‘தனி ஒருவன்’ படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என்றும், மீண்டும் மோகன் ராஜா, ஜெயம் ரவி கூட்டணி இணையும் என்றும் சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டிருந்த னர். ரசிகர்களை நேரிலும், தனது சமூக வலைத்தளங்களின் மூலமும் சந்தித்த ஜெயம் ரவி, வெகுவிரைவில் ‘தனி ஒருவன்’ 2ம் பாகம் உருவாகும் என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மோகன் ராஜா டைரக்ஷனில் ‘தனி ஒருவன்’ 2ம் பாகத்தின் கதை தயாராகி விட்டது.