சூர்யாவுடன் மோதலா? பாலா பதில்

சென்னை: சூர்யாவுடன் மோதலா என்ற கேள்விக்கு இயக்குனர் பாலா பதிலளித்தார். சூர்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கும் படம் வணங்கான். இதை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்தது. இதற்கிடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் படமே கைவிடப்பட்டு விட்டதாகவும் இணையதளத்தில் தகவல் பரவியது. இதற்கு காரணம், சூர்யா - பாலா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இந்த பிரச்னையால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை 2டி நிறுவனம் மறுத்தது.

இந்நிலையில் இதுபற்றி எந்த விளக்கமும் சூர்யா தரப்பிலோ பாலா தரப்பிலோ வெளியிடப்படவில்லை. இப்போது முதல்முறையாக இது குறித்து பாலா பதிலளித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் பாலா பங்கேற்றார். அப்போது, நிருபர்கள் பாலாவிடம் வணங்கான் படம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என கேட்டனர். ‘போய்க்கொண்டிருக்கிறது’ என்றார். சூர்யாவுடன் உங்களுக்கு மோதலாமே என கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாலா, ‘சூர்யாவுடன் மோதல் இல்லை. உங்களுடன் (நிருபர்களுடன்) மோதல் இருக்க வாய்ப்புள்ளது’ என சிரித்தபடி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: