வலுவான கதையுள்ள படம்தான் இனி ஹிட்டாகும்: ராம் சரண்

ஐதராபாத்: நல்ல வலுவான கதையுள்ள படங்கள்தான் இனி பாக்ஸ் ஆபீசில் ஜெயிக்கும் என்றார் நடிகர் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் கூறியதாவது: ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களுக்கு பிறகு இப்போது பான் இந்தியா அளவில் காந்தாரா படம்தான் ஓடுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், வலுவான கான்செப்ட். வலுவில்லாத கதையை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது. படம் தனது முழு பலத்தை கதையில் காட்டும்போது, அது ஜெயிக்கிறது. இனி பாக்ஸ் ஆபீசில் இதுபோன்ற படங்கள்தான் ஓடும். அத்தகைய படங்களில் நடிப்பவர்கள் கண்டிப்பாக பாக்கியசாலிகள். அந்த வகையில் எனக்கும் அதுபோல் ஆர்ஆர்ஆர் படம் அமைந்தது பெருமையாக இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து நான் நடித்த ஆச்சார்யா படம் சரியாக போகாததற்கும் கதைதான் காரணம். அதை நான் மறுக்கவில்லை. எப்போதும் கன்டென்ட்தான் கிங். அதை மீறியது எதுவும் கிடையாது. எத்தனை பெரிய ஹீரோ நடித்தாலும் படத்தின் கதையைத்தான் மக்கள் பார்ப்பார்கள். அதற்கு நிறைய படங்களை உதாரணமாக சொல்ல முடியும். இவ்வாறு ராம் சரண் கூறினார்.

Related Stories: