×

காதலரை பிரிந்தார் யாஷிகா

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், தனது காதலரை பிரிந்துவிட்டார். பல தமிழ் படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், ஒருவரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆண் ஒருவரின் கையை பிடித்தபடி தனது இன்ஸ்டாகிராமிலும் புகைப்படம் வெளியிட்டார். ஆனால் அந்த நபர் யார் என தெரிவிக்கவில்லை. அவரது முகத்தையும் காட்டவில்லை. இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி யாஷிகா காயம் அடைந்தார். அவரது தோழி இறந்தார். யாஷிகாவுக்கு ஆபரேஷன் நடந்தது. அதற்கு பிறகு உடல் நலம் தேறி, மீண்டும் நடிக்க வந்தார் யாஷிகா. அப்போதும் தனது காதலருடன் நல்ல முறையில் யாஷிகா பழகி வந்தார்.

இந்நிலையில் நிரூப் என்பவரைத்தான் யாஷிகா காதலிக்கிறார் என்பது தெரியவந்தது. டிவி நிகழ்ச்சிகளில் நிரூப் பங்கேற்று இருக்கிறார். சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படங்களை நிரூப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திடீரென காதலர்கள் பிரிந்துள்ளனர். சமீபத்தில் நிரூப்  யாஷிகாவுடன் பிரேக் அப் செய்தது குறித்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் ‘‘இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம், காதலர்களாக இருந்தோம், பிரண்ட்ஸாகவும் இருந்தோம், நமது உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதும் போல் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து யாஷிகா கூறும்போது, ‘நல்ல டயலாக் டெலிவரி. நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவருடைய (நிரூப்) டயலாக் போல் பேசியுள்ளார். ஒரு பாய்பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மனது காயப்பட்டு உடைந்து போவது தான்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Yashika ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!