ரசிகரை அழ வைத்த விஜய் சேதுபதி

ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தருவதில் அஜித்தை போல் விஜய் சேதுபதியும் முக்கியமானவர். திண்டிவனத்தில் நடந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகி புகழேந்தி என்பவரின் திருமணத்துக்கு திடீரென சென்று, ரசிகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பலர் திரண்டிருந்த அந்த திருமண விழாவில், திடீரென வந்து மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். பிறகு மணமகனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தும் விஜய் சேதுபதி தனது நட்பை வெளிப்படுத்தினார்.

இதனால் நெகிழ்ச்சி அடைந்த மணமகன் மேடையிலேயே கண்கலங்கி அழுதுவிட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.விஜய் சேதுபதி தற்போது விக்ரம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்து வாக்குல ரெண்டு காதல், விடுதலை மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இந்தியில் மும்பைகர், மேரி கிறிஸ்மஸ், மலையாளத்தில் ஒரு படம், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார்.

Related Stories: