தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இந்த காலகட்டத்தில் தனது மகன் பெருமைபடும் விதமாக நடந்து கொண்டதாக நாகார்ஜுனா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பங்கர்ராஜூ பட நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:
விவாகரத்து விஷயத்தில் நாக சைதன்யா அமைதியாக இருந்தார் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. எல்லா தந்தையையும் போலவே நானும் அவரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். என்றார்.