காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் இபிகோ 302. கடந்த 31ம் தேதி இந்த படம் வெளியானது. பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்க வேண்டிய நான் நடிகை கஸ்தூரியால் தப்பித்தேன் என்கிறார் இயக்குனர் சலங்கை துரை. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சவுத் இந்தியன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர். செங்கோடன் துரைசாமி மற்றும் திருச்செங்கோடு கே. கே. கணேசன் மற்றும் ராபின் பிரபு ஆகியோர் இணைந்து இபிபோ 302 படத்தை எனக்காக தயாரித்தனர். டிசம்பர் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.