கொல்கத்தா: பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவத்தை கண்டித்து கொதித்தெழுந்த பெங்காலி நடிகை, தனது சமூக வலைதளத்தில் உள்ள போட்டேக்களை அகற்றிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பங்களாதேஷ் நாட்டின் கொமில்லா, ஃபெனி, ரங்பூர், சிட்டகாங் பகுதிகளில் உள்ள இஸ்கான் கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள சிறுபான்மை சமூகத்தினர் சிலர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 4,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார்.