திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (73) நேற்று காலமானார். மலையாள சினிமாவில் கடந்த 1978ல் அரவிந்தன் இயக்கிய தம்பு என்ற படத்தில் அறிமுகமானவர் நெடுமுடி வேணு. பின்னர் நாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பஞ்சவடிபாலம், காதோடு காதோரம், தேவாசுரம், பரதன் உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ள இவர், 7 படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 3 முறை தேசிய விருதும், 6 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். தமிழில் இந்தியன், சர்வம் தாள மயம், சிலம்பாட்டம், அந்நியன், சமீபத்தில் வெளியான நவரசா உள்ளிட்ட படங்களில்
நடித்துள்ளார். எந்த வேடத்தை தந்தாலும் அதில் அந்த கேரக்டராகவே மாறிவிடும் இயல்பான நடிகர், நெடுமுடி வேணு. திலகனை போல் இவரும் மலையாளம், தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்.