மதராசப்பட்டினம், ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 படங்களில் நடித்த லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். பீட்டா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் உள்ள இறைச்சி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவலுக்கு இறைச்சி கூடங்கள் பெரும் காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கூடங்களில் உள்ள குளிர்ச்சி. தரையில் எப்போதும் இருக்கும் ஈரம், சரியான காற்றோட்ட வசதி இல்லாதது போன்றவைதான் இதற்கு காரணம். இது கண்கூடான உண்மையாக இருக்கும்போது இது பற்றி விவாதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் எமி ஜாக்சன்.