சாய் பல்லவி ஆனந்தக்கண்ணீர்

மலையாளத்தில் கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான படம், பிரேமம். நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்த இப்படத்தில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டர், ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக பேசப்படுகிறது  “மலர் வேடம் இவ்வளவு பரபரப்பாக பேசப்படும் என்று நினைத்தீர்களா?” என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்ரன் பதிலளிக்கையில்,“படத்தில் இடம்பெற்ற வினய் ஃபோர்ட், சோபின் ஷாஹிர் கேரக்டர்கள் பேசப்படும் என்று நினைத்தேன். காரணம், அவர்கள்தான் மலர் கேரக்டருக்கான வர்ணனையை செய்கின்றனர். 

அதுதான் அந்த கேரக்டர் பிரபலமடைய பெரிய காரணமாக இருந்தது. திரைக்கதையில் அது சின்ன யோசனைதான். அந்த இரண்டு கேரக்டர்கள் இல்லை என்றால், படம் மிகவும் போரடிக்கும் காதல் கதையாக மாறியிருக்கும்” என்றார். இன்றளவும் ரசிகர்கள் தன்னை மலர் டீச்சர் என்று அழைப்பதை நினைத்து, எதுவும் பதில் பேச முடியாமல் ஆனந்தக்கண்ணீர் மட்டுமே வருகிறது என்று சொன்ன சாய் பல்லவி, மீண்டும் மலராக நடிக்க காத்திருக்கிறாராம்.

Related Stories: