கீர்த்தி சுரேசை பின்தொடரும் 50 லட்சம் பேர்

தென்னிந்திய மொழிகளில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். அறிமுகமான சில வருடங்களிலேயே தேசிய விருது. முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளம் என உயரத்தை தொட்டு நிற்கிறார். அதே நேரத்தில் இன்ஸ்ட்கிராம் மூலமாக தனது ரசிகர்களுடனும் தொடர்பில் இருக்கிறார்.

தற்போது இன்ஸ்ட்ராகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிககை 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் இன்ஸ்ட்ராகிராமில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories: