×

வாடகை தாய் மூலம் பிள்ளை பெறுவதா? நடிகை ஷில்பாவுக்கு எதிர்ப்பு

நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்தராவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஷில்பாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இவருக்கு திடீரென்று மற்றொரு குழந்தை பெற ஆசை வந்தது. ஆனால் வயதின் காரணமாக ஷில்பா கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவது சிரமம், அப்படியே பெற்றாலும் நடிகைக்கான உடல் தோற்றத்தை பராமரிப்பது கடினம் என எண்ணினார். இதையடுத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

அதன்படி வாடகை தாய் மூலம் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றிய தகவலை இணைய தளம் மூலம் வெளிப்படுத்தினார்.  சமிஷா ஷெட்டி குந்த்ரா என குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார்.
ஷில்பாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி கூறும்போது,’எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது. மற்றொரு குழந்தை மீது ஆசை பிறந்திருக்கிறது.

அந்த குழந்தையை பெறுவதற்கு வாடகை தாயை அணுகுவதைவிட குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்திருக்கிறோம். இந்த உலகில் ஏற்கனவே பிறந்து பெற்றோர் இல்லாமலிருக்கும், ஒரு உயிருக்கு நம் இல்லத்தை தரவேண்டும். இதுபற்றி எனது சகோதரி கங்கனாவிடம் கூறியபோது பாராட்டினார். குழந்தைக்கு கங்கா என அவர் பெயரும் வைத்திருக்கிறார். ஒரு குழந்தைக்கு வீடு தருகிறோம் என்ற அதிர்ஷ்டம் சந்தோஷம் அளிக்கிறது’ என்றார் ரங்கோலி.

Tags : surrogate mother ,Shilpa ,
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...