விமானத்தில் பாடல் வெளியிட்டது ஏன்? சூர்யா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு நடித்துள்ள படம், சூரரைப்போற்று. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விவேக் எழுதிய ‘வெய்யோன்சில்லி’ என்ற பாடல், சென்னையில் நடுவானில்  பறந்த விமானத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து சூர்யா கூறியதாவது: விமானத்துறையில் சாதனை படைத்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையில் நடிப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இதில் இடம்பெறும் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் படமாக்கப்பட்டது. எனவே, முதல்முறையாக விமானத்தில் பயணிக்கும் 70 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்தேன். கடல் மீது விமானம் பறந்தபோது ஒரு பாடலை வெளியிட்டோம். இது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

Related Stories: