யுவனை இசை வாசிக்க வைத்த பவதாரிணி

இளையராஜா மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா, மகள் பவதாரிணி. இவர்கள் மூவருமே இசை அமைப்பாளர்கள், பாடகர்களாகவும் இருக்கிறார்கள். பவதாரிணி இசையில் மாயநதி என்ற புதிய படம் உருவாகிறது. அசோக் தியாகராஜன் இயக்குகிறார். ராஜ்நிலாமுகில் பிலிம்ஸ் தயாரிப்பு. அபி சரவணன், வெண்பா ஜோடி. ஆடுகளம் நரேன், அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ, டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதில் யுவன்சங்கர்ராஜா பேசும்போது, ’மாயநதி படத்தின் பாடல்கள் ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்துக்கு என் அக்கா பவதாரிணி இசை அமைத்திருக்கிறார். இசை எங்கள் ரத்தத்திலேயே ஊறி இருக்கு. என் கை பிடித்து இசை வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணிதான். இந்தளவிற்கு என்னை அழைத்து வந்ததும் அவர்தான்’ என்றார். நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசும்போது,’தமிழ்நாட்டில் பெரிய கலைஞர்கள் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன்.

அவர்களைபற்றிய பதிவுகளை உடனடியாக செய்ய வேண்டும். வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை வேறு, அரசியல் வேறு. பொது விஷயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்திருக்கிறேன். சினிமாவில் இருக்கும் பலரும் எம்ஜிஆர் ஆக முயற்சிக்கிறார்கள்’ என்றார்.

Related Stories: