×

லண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்

விமல் நாயகனாக நடிக்கும் ’சண்டக்காரி’ படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதன் படப்பிடிப்பு லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆர் மாதேஷ் இயக்குகிறார். லண்டன் விமான நிலையத்தில் காட்சி படமாக்கப் பட்டபோது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை தாண்டிச் சென்றார் ஸ்ரேயா. உடனே போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். குடியுரிமை பகுதியை ஏன் தாண்டினீர்கள் என துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இதையறிந்து வந்த படக்குழுவினர்  போலீஸாரிடம் பேசினர். படப்பிடிப்புக்காக அனுமதி வாங்கி வந்த  ஆவணங்களை ஸ்ரேயா தெரியாமல் அப்பகுதியை தாண்டி விட்டதாகவும் கூறினார். அதன்பிறகு மேலும் சில நிமிடங்கள் விசாரணை நடத்தினர். அதன்பிறகே ஸ்ரேயாவை போலீசார் விடுவித்தனர். இதனால் படக்குழுவினர் பதற்றம் அடைந்தனர்.

Tags : Shreya ,London ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...