எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக நடித்த நம்பியாரும் நேரில் பார்த்தால் சாதுவாக இருப்பார் படத்தில் நடுங்க வைக்கும் வில்லனாக இருப்பார். அப்படியொருவர் தான் நடிகர் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஒரு ஓவியர், மெழுகு சிலை வடிவமைப்பாளர், டிசைனர் என வெவ்வேறு முகம் கொண்டவர். ஏற்கனவே ஆந்திரா மெஸ் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதர் தற்போது ஜடா படத்தில் தடாலடி வில்லனாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பக்கம் பக்கமாக வசனம் பேசி மிரட்டுவதைவிட பார்வையிலும் ஆக்ஷனிலும் மிரட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். ஜடா படத்தில் அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும்போதும் நடித்த காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் கதிர் ஹீரோ. இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். ஒளிப்பதிவாளர் சூர்யா, எடிட்டர் ரிச்சர்ட் கூட்டு முயற்சியால்தான் என் நடிப்பு பேசப்படுகிறது’ என்றார்.