×

திருமணத்தால் பட வாய்ப்பை இழந்தாரா சாயிஷா

திரையுலகுக்கு வந்து பல படங்களில் நடித்து 5 வருடம் ஆன நடிகைகளிடம் உங்கள் திருமணம் எப்போது என்றுகேட்டால், ‘இன்னும் 3 வருடம் ஆகும்’ என்று ரெடிமேட் ஆக கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்கின்றனர். ஆனால் திரையுலகுக்கு வந்து 3 வருடங்கள் மட்டுமே ஆன நடிகை சாயிஷா திடீரென்று நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தமிழில் வனமகன் படம் மூலம் அறிமுகமான சாயிஷா அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்தார்.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யா வுடன் ஜோடியாக நடித்தபோதுதான் ஆர்யாவுடன் சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை உடனடியாக கல்யாணமாக மாற்றிவிட்டார் ஆர்யா. திருமணம் ஆனாலே ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்துவிடுவது சகஜம். சாயிஷாவுக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சூர்யாவுடன் காப்பான் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடித்தார்.

காதல் காட்சிகளில் நடிக்கும்போது சாயிஷாவால் நெருக்கமாக நடிக்க முடிந்தாலும் அதை ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகமே இருந்தது. இதையடுத்து அவருக்கு வேறு ஹீரோக்களுடன் படங்கள் தேடி வரவில்லை. நட்சத்திர காதல் ஜோடி என்ற மவுசு இருப்பதால் மீண்டும் கணவர் ஆர்யாவுடனே சாயிஷாவுக்கு டெடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

டெடி படத்தை சக்தி சவுந்திரராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. திருமணத்துக்கு பிறகு ஆர்யா, சாயிஷா காதல் ேஜாடிகளாக நடிக்கும் படம் இது என்பது பிளஸ் பாயின்ட்டாக பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டுகொள் ளாத ஹீரோக்கள் இனிமேலாவது கண்டுகொள்வார்களா, சாயிஷாவுக்கு மற்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வருமா என்பது இனிதான் தெரியவரும்.

Tags : Saiisha ,
× RELATED பாசமழையில் நனைந்த ஆர்யா - சாயிஷா