நோட்டா பட ஹீரோ விஜய்தேவரகொண்டா டோலிவுட் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து நடித்த கீதா கோவிந்தம் படமும் செம ஹிட்டானது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார். முன்னதாக இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கை நடிக்க கேட்டனர். அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நிலையில் படத்தை நழுவவிட்டதற்காக வருத்தத்தில் ஆழ்ந்தார். விஜய்தேவரகொண்டாவுடன் நடிக்க மறுத்தது ஏன் என்று ரகுலிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும் போது,’கீதா கோவிந்தம் படத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் நடிக்க எனக்குதான் முதலில் வாய்ப்பு வந்தது.
அப்போது நான் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். தே தே பியார் தே படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்து வந்தநிலையில் அப்படத்துக்காக கால்ஷீட் தேதிகளை ஒதுக்கித் தந்திருந்தேன். அதனால்தான் கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க முடியாமல்போனது. இதில் நடிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் இல்லை என்றாலும் அதில் நான் நடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது’ என தெரிவித்தார் ரகுல்.