×

படப்பிடிப்புக்கு வருவதில்லை... ஷாலினி பாண்டே மீது புகார்

விஜய் தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஜோடிபோட்டு முதல் படத்திலேயே சூடான முத்தம் கொடுத்து பரபரப்பானவர் ஷாலினி பாண்டே. தமிழில் கொரில்லா, 100 பர்சென்ட் காதல் படங்களில் நடித்திருக் கிறார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களில்  நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் இந்நிலையில் ரன்வீர் சிங்குடன் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தி படம் ஒப்புக்கொண்டதுமுதல் ஷாலினி பாண்டேவின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. ஏற்கனவே ஒப்புக்கொண்ட தமிழ், தெலுங்கு படங்களின் படப்பிடிப்புக்கு வராமலும் அதுபற்றி கவலைப்படாமலும் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் இந்தி படத்துக்கே கொடுத்துவிட்டாராம்.

இதுபற்றி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். அவரது மேனேஜரிடம் கேட்டாலும் சரியான பதில் வருவதில்லை என்று தமிழ், தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து ஷாலினி பாண்டே மீது பிலிம்சேம்பர் ஆப் காமர்ஸில் புகார் தரப்பட்டது. தொடர்ந்து ஷாலினி பாண்ேட மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்திருக்கின்றனர்.

Tags : Shalini Pandey ,
× RELATED காய்ச்சலை கலாய்க்கும் ஷாலினி பாண்டே