×

முப்பரிமாண கதையாக உருவாகும் ‘தேடு’

மது மயக்கம், காதல் மயக்கம், செல்பி மயக்கம் என முப்பரிமாண கதையாக உருவாகிறது தேடு. இதுபற்றி இயக்குனர் ஈஸ்வர் கூறும்போது,’இளைய தலைமுறைகளின் செயல்பாடுகளை மையமாக வைத்து பயணப்படும் ‘தேடு’ படம் வித்தியாசமான காட்சி அமைப்புகள், எதிர்பாராத திருப்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் அனைவரும் மயக்கம் கலைந்து, தவறுகளை களைந்து இலக்கை அடைந்தார்களா என்பதே கதை. சஞ்சய், மேக்னா ஜோடியுடன் முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன், பிரபாகரன், கமலா, சுவாமிதாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சபரி ஒளிப்பதிவு. டி.ஜே.கோபிநாத் இசை’ என்றார்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...