×

படம் ஹிட்டுன்னா எழுப்புங்க..இல்லாவிட்டால்... ஹீரோ திக் திக்

பாகுபலி ஹீரோ பிரபாஸ் தனது படங்கள் வெளியாகும்போது முதல்நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பது வழக்கம். பாகுபலி படம் வெளியானபோது முதல் நாள் முதல்காட்சியை ரசிகர்களுடன் பார்க்க பயந்தார். காரணம் அதில் கிளைமாக்ஸில் பிரபாஸ் இறப்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது,’எப்போதுமே நான் நடித்த படத்தை முதல்நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பேன்.

பாகுபலி ரிலீஸ் ஆகும்போது எனக்கு திக் திக் என்று இதயம் படபடத்தது. படத்துக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் தெலுங்கில் அது வேறுவிதமாக இருந்தது. இதில் கட்டப்பாவால் நான் கொல்லப்படுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது தான் காரணம். அதனால் படம் ரிலீஸ் ஆகும் நாளில் என் நண்பர்களை அழைத்து, ‘படம் ஹிட் என்றால் என்னை எழுப்புங்கள் இல்லாவிட்டால் எழுப்பாதீர்கள்’ என்று கூறினேன்.

படம் வெளியானது. ஆனால் யாரும் என்னை எழுப்பவில்லை. பாகுபலி தோல்வி அடைந்து விட்டது என்று எண்ணினேன். ஆனால் அன்று மாலை முதல் மக்கள் படத்துக்கு திரண்டு வர ஆரம்பித்தார்கள். அதன்பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. நான் நடித்துள்ள சாஹோ படம் இம்மாதம் வெளியாகிறது. பாகுபலி ரிலீஸ் ஆகும்போது இருந்த அதே திக் திக் நிலைமையில்தான் தற்போதும் இருக்கிறேன்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்