ஐஸ்வர்யாராய் தான் வேணும்...! முரண்டு பிடிக்கும் ஹீரோ

ஜீன்ஸ், எந்திரன், இருவர், ராவணன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என தமிழில் பல படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் தெலுங்கு படத்தில் இதுவரை நடிக்கவில்லை. செ ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள சிரஞ்சீவி அப்படத்துக்கு பிறகு நடிக்கும் புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்க உள்ளார். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசித்த போது நயன்தாரா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்தால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஒரு தரப்பு கூற அதற்கு இயக்குனரும் பச்சைகொடி காட்டியிருக்கிறாராம். சிரஞ்சீவியிடம் கேட்டபோது அவரும் ஒகே சொல்லியிருக்கிறார். என்னதான் இயக்குனர் பச்சை கொடி காட்டினாலும், ஹீரோ ஒகே சொன்னா லும் கால்ஷீட் தருவதற்கு ஐஸ்வர்யாராய் பச்சைகொடி காட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்வு செய்தும், தனக்கு முக்கியத்துவம் தரும் கதையாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கும் ஐஸ்வர்யாராய், சிரஞ்சீவி படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஐஸ்வர்யாராயிடம் பேசி அவரது சம்மதத்தை படக்குழு பெற்றுவிட்டால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: