நடிக்க வரட்டுமா....? கருத்துகேட்ட குஷ்பு...!

திருமணத்துக்கு பிறகு நடிகை குஷ்பு நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். பட தயாரிப்பில் ஈடுபட்டதுடன் அரசியலில் குதித்து தீவிரமாக பிரசாரங்களிலும் ஈடுபட்டார். இதற்கிடையில் சினிமாவில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணமிருந்தது. குடும்ப பொறுப்பு, அரசியல் பணி காரணமாக நடிப்பை தவிர்த்து வந்தார். டிவி சீரியலில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இணைய தள டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர்களில் குஷ்புவும் ஒருவர். தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதுடன் யாராவது தன்னைப்பற்றி தவறாக குறிப்பிட்டால் அவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களின் வாயடைப்பதிலும் பின்வாங்குவதில்லை. குஷ்புக்கு ஒரு காலத்தில் ரசிகர்கள் கோயில் கட்டிய நிகழ்வும் நடந்திருக்கிறது.

வயதானலும் தனது அழகு குன்றாமல் பராமரித்து வரும் குஷ்புவை இப்போதும் பலர் வர்ணித்து வசனங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சினிமாவில் நடிக்க வர எண்ணியிருக்கும் குஷ்பு அதுபற்றி தனது ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். ‘பட வாய்ப்புகள் வருகிறது மீண்டும் நடிக்க வரலாமா?’ என குஷ்பு கருத்து கேட்க அதற்கு ஏராளமான ரசிகர்கள் அவரை மீண்டும் நடிக்க வர கேட்டதுடன் வாழ்த்தும் கூறி வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்திருக்கிறார் குஷ்பு.

Related Stories: